வெள்ளி, 24 அக்டோபர், 2014

கைப்பை -4

டைரி:

கடந்த பதிவை படிச்சீங்களா? இல்லைனா கொஞ்சம் இங்க சொடுக்கி படிச்சுடுங்களேன். இல்லன்னா கன்டியுவிட்டி மிஸ் ஆகும் அதனால சொல்லுறேன். என்னது நீங்க ஏற்கனவே படிச்சாச்சா. அப்போ கண்டின்யூ பண்ணுங்க.

திங்கள், 20 அக்டோபர், 2014

நிறையத்துடிக்கும் தேநீர் கோப்பை!




விரலிடுக்கில் வழிந்துவிடப்போகும்
கடைசித்துளியை பத்திரப்படுத்தும்
எத்தெனங்களோடு சொன்னாய்
கீப்-இன்-டச்!!

சனி, 18 அக்டோபர், 2014

உப்புமா எனும் விடுமுறை


கூகிளில் சுட்டது


ராஜபக்சேவின் சட்டையை
உங்கள் அறையில் பத்திரமாய் இருந்தபடியே
உலுக்கிவிட்ட ஒரு இற்றைக்கும்
சமந்தா வின் புன்னகைக்கு
ஒரு லைக் தட்டலுக்கும் இடையே
தட்டிவிடுகிறீர்கள் உங்கள் மனைவியின்
உப்புமா குறித்தொரு பகடியை

புதன், 15 அக்டோபர், 2014

இதுக்கு என்ன தலைப்பு கொடுக்கிறது?????

              

அப்படியே இந்த வார்த்தையையும் கத்துகோங்க:)

       எங்க ஊர்ல வைகாசித் திருவிழா வரும். அப்போ கடைசி மூணுநாள் ஏரியாவே களைகட்டும். தாத்தா பூசாரி இல்லை, ஆனா அவர் தான் எங்கள் முனியப்பன் கோயிலில் ஆடு வெட்டுவார் (so என் பேரை பார்த்து நான் பிராமின் என நினைத்தவர்கள் இப்போ புரிஞ்சுக்கங்க நான் non-Brahmin:) அதில் பால் குடம் எடுக்கும் நாளில் நடக்க முடியாத பெரியவர்களை தவிர சாதி மத பேதம் இல்லாம ஊரே காமராஜர் சிலையில் இருந்து ரெங்கவிலாஸ் வரை உள்ள சாலையில் தான் இருக்கும்.
                    

செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெற்றுத்தாள் புன்னகை








உனக்கான கவிதைகளில்
ஒரு பந்தயக்குதிரையாகவும்
உன்னோடான தருணங்களில்
நொண்டிக்குதிரையாகவும் என் சொற்கள்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

கொஞ்சம் ENGLISH-PART IX




                                                கொஞ்சம் English எழுதி ரொம்ப நாள் ஆச்சுப்போலவே!
இந்த முறை கொஞ்சம் ஜாலியா ஒரு புதிர் விளையாட்டு. இன்னொரு tab ல விடைதட்டி என் கிட்ட மட்டும் தான் மார்க் வாங்க முடியும், நீங்க எவ்ளோ வாங்கி இருக்கிங்க னு உங்களுக்கு தெரியும் இல்லையா:)(எக்ஸாம் ஹால் ல question பேப்பர் கொடுக்கிறதுக்கு முன்னால இப்படி லெக்சர் கொடுத்து பழகிடுச்சு)

வியாழன், 9 அக்டோபர், 2014

பெற்றோர் தவற விடக்கூடாத ஒரு நூல்!

               ஒரு படத்தை ரிலீஸ்க்கு முன்னமே ப்ரிவியு ஷோ ல பார்க்கும் பரபரப்புக்கும், சுவரஸ்யத்துக்கும் சற்றும் குறைவில்லாது இருந்தது நிலவன் அண்ணாவின் நூல்கள் வெளியிடப்படும் முன்னரே வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு. அதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். நூல்களை விமர்சிக்கும், அதுவும் நிலவன் அண்ணாவின் நூல்களை விமர்சிக்கும் அளவு நம்ம பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க. எனவே இது நூல் அறிமுகம் தான். 

திங்கள், 6 அக்டோபர், 2014

நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா-மினி பதிவர் சந்திப்புகூட்டம்

                         
தமிழ் இளங்கோ அண்ணா,கரந்தை அண்ணா,மைதிலி மற்றும் மகி,நிறை,கிரேஸ் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் வினோத் அவர்கள்.
                                நேற்று 5-10-2014 கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா புதுகையில் ஐந்து மணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை சீரும், சிறப்புமாக நடந்தது. விழாவை பற்றி தெளிவா, சுருக்கமா தெரிஞ்சுக்க தென்றல் கீதா அக்காவின் இந்த பதிவை பாருங்க. இன்னும் பலரும் இந்த விழாவை பற்றி பல்வேறு கோணத்தில் எழுதுவாங்க. so,நேற்று நான் சந்திக்க வாய்ப்புகிடைத்த அன்பு நட்புகளையும், சகோகளையும் பற்றி இங்க சொல்லப்போறேன்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கைப்பை -3





 டைரி 

                  வரவர நிறைக்குட்டி பேச்சில்  நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. ஒரு செருப்புக்கடையை  கடந்த போது சொன்னாள் "அம்மா, இந்த செப்பல் கடைகாரர் நல்ல புத்திசாலிதான். நான் "ஏன்டா அப்டி சொல்லுற?" பாருங்கம்மா கோவிலுக்கு பக்கத்துல வைச்சுருக்காரே! அங்க செப்பலை தொலைச்சவங்க, இங்க வாங்கிக்குவாங்க இல்ல".